Thursday 19 June 2014

நான்காவது நக்கீரர் குலாம் காதிர் - தி இந்து

நான்காவது நக்கீரர் குலாம் காதிர் - தி இந்து







குலாம் காதிறு அவர்கள் பாவலர், பத்திரிகையாளர், உரையாசிரியர், நாவலர் என வரலாற்றுத் தடம் பதித்த பல்கலைச் செல்வராவார்.
புலவர் கோட்டை எனப் பெயர் பெற்ற நாகூர் நன்னகரில் கி.பி.1833 ஆம் ஆண்டு குலாம் காதிறு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஆயுர்வேத பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தர். இவரது முன்னோர் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து நாகூர் வந்து குடியமர்ந்தனர்.
குலாம் காதிர் ஒன்பது வயதில் இறைவேதம் குர்ஆனையும் அரபுத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய நூல்களையும் ஓதி முடித்தார். பன்னிரெண்டாவது வயதில் நாகூரில் வாழ்ந்த தமிழ் ஆசிரியர் நாராயண சுவாமியிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். இவரது இருபத்தி எட்டாம் வயதில் தமிழ் ஆசிரியர் இறந்துவிட்டதால், மகா வித்வான் திரு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ்ப் படிப்பைத் தொடர்ந்தார். அதன் பின் தந்தையின் நண்பரும் வழக்கறிஞருமான சரவணப் பெருமாள் ஐயரிடம் ஆங்கில மொழியைக் கற்றார். ஆங்கில நாவலாசிரியர் ஜி.டபிள்யு.எம்.ரெனால்ட்ஸ் எழுதிய உமறு பாட்சா யுத்த சரித்திர நாவலை தமிழில் மொழிபெயர்த்தார்.
முதல் முதலில் தனிக் கவிதைகள் கீர்த்தனைகள் இயற்றினார். பிறகு பினாங்கு சென்று ‘வித்யா விசாரினி’ என்ற பெயரில் தமிழ் வார இதழ் ஒன்றினை 1888இல் நடத்தினார். நன்னூல் விளக்கம் எழுதினார்.
‘பொருத்த விளக்கம்’ நூலிற்கு சுதேசமித்திரன் நாளிதழில் வெளிவந்த மதிப்புரையை ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் பார்த்து பெருமகிழ்வுற்று கி.பி.1901 ஆம் ஆண்டு பாஸ்கர சேதுபதியுடன் நாகூர் சென்று, குலாம் காதிர் நாவலரை சந்தித்து உரையாடினார். அப்பொழுது நாவலர் மதுரையில் தமிழ்ச்சங்கம் ஒன்றினை நிறுவும்படிக் கேட்டுக்கொண்டார். தமிழ்ச்சங்கத்தின் முதற்பெரும் உறுப்பினராக குலாம் காதிறு நாவலரின் பெயரைச் சேர்த்தார்.
அரபு மொழியின் கடுமையான அச்சர வாக்கியங்களுக்கு நேரான தமிழ் மொழியினை அறிந்து அரபுத் தமிழ் அகராதி ஒன்றினை நாவலர் சிறந்த முறையில் வெளியிட்டார்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி தமிழக அரசு குலாம் காதிறு நாவலரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது.

Thursday 3 April 2014

இடுக்கண் களைவது நட்பு...


 
 
 
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். அது நேர்மை, நேசம், பிறருக்கு உதவுதல், அடுத்தவர் நலம் பேணல் போன்ற பண்புகளைச் சொல்லித் தருகிறது. இதன் நோக்கம் ஒரு நண்பர் நேரான பாதையில் நடந்தால், அவருக்குத் தேவையான உதவி ஒத்தாசைகளை நாம் செய்து தர வேண்டும். அவர் தவறு செய்தால், அவரை நல்வழிக்குக் கொண்டு வர வேண்டும். இதையே பின்வரும் நபி மொழியும் கூறுகிறது.
"ஒருவர் தனது சகோதரருக்கு உதவட்டும். அவர் அநீதி இழைப்பவராகவோ - அநீதி இழைக்கப்படுபவராகவோ இருந்தாலும் சரியே! அவர் அநீதி இழைப்பவராக இருந்தால் அவரைத் தடுத்து நிறுத்தட்டும். அவருக்கு அது நலம் விளைவிக்கும். அநீதி இழைக்கப்பட்டவராக இருந்தால், அவருக்கு உதவி புரியட்டும்!''
-முஸ்லிம்.
மனிதன் பிறந்தான், வாழ்ந்தான், மறைந்தான் என பிறர் சொல்ல வாழ்வது வாழ்க்கையல்ல. "இவரைப்போல் இனி யார் வாழ்ந்து காட்ட முடியும்?''என ஒவ்வொரு மனிதனும் பாராட்டப்படும்படி  வெற்றி முத்திரை பதிக்க வேண்டும். இதற்குத் தேவை, இறையச்சம், நற்பண்பு, நேர்மை, நாணயம் மட்டும்தான் என்பதை எவரும் மறுக்க இயலாது.
வான்புகழ் வள்ளுவர் நட்பு பற்றி இரண்டே வரிகளில் கூறுவதைக் காண்போம்:
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதுஆம் நட்பு''.
நாம் யார் யாருடன் தோழமை கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாத்தின் நான்காவது கலீஃபாஅலீ (ரலி) அவர்கள் கூறுவதைக் காண்போம்:
"பொய் பேசுபவனிடம் நட்புக் கொண்டால், நன்மையைத் தீமையாகவும், கெட்டதை நல்லதாகவும் கூறுவான். கஞ்சனிடம் நட்பு வைத்தால், ஒரு கவளச் சோற்றுக்காக உன்னையே விற்று விடவும் தயங்க மாட்டான். முட்டாளுடன் நட்புக் கொண்டால், தன்னை அறியாமலேயே கேட்டில் மாட்டிவைத்து விடுவான்.
சாபமிடும் பழக்கமுள்ளவனிடம் தோழமை கொண்டால், ஒருநாள் உன்னையும் சபித்துவிடுவான். உனது முகத்திற்கு முன் புகழ்பவனிடம் நட்புக் கொண்டால், உன்னை ஒருநாள் இகழ்ந்து பேசுவான்.
எனவே, தோழமை கொள்ள இறையச்சம் கொண்ட நல்ல மனிதரே சிறந்தவராவார். அவரிடமே நட்புக்கொண்டு இறையன்பைப் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ்வோம

Saturday 22 March 2014

நான்காவது நக்கீரர் குலாம் காதிர்

நாகை ஜி. அஹ்மது

குலாம் காதிறு அவர்கள் பாவலர், பத்திரிகையாளர், உரையாசிரியர், நாவலர் என வரலாற்றுத் தடம் பதித்த பல்கலைச் செல்வராவார்.
புலவர் கோட்டை எனப் பெயர் பெற்ற நாகூர் நன்னகரில் கி.பி.1833 ஆம் ஆண்டு குலாம் காதிறு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஆயுர்வேத பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தர். இவரது முன்னோர் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து நாகூர் வந்து குடியமர்ந்தனர்.
குலாம் காதிர் ஒன்பது வயதில் இறைவேதம் குர்ஆனையும் அரபுத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய நூல்களையும் ஓதி முடித்தார். பன்னிரெண்டாவது வயதில் நாகூரில் வாழ்ந்த தமிழ் ஆசிரியர் நாராயண சுவாமியிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். இவரது இருபத்தி எட்டாம் வயதில் தமிழ் ஆசிரியர் இறந்துவிட்டதால், மகா வித்வான் திரு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ்ப் படிப்பைத் தொடர்ந்தார். அதன் பின் தந்தையின் நண்பரும் வழக்கறிஞருமான சரவணப் பெருமாள் ஐயரிடம் ஆங்கில மொழியைக் கற்றார். ஆங்கில நாவலாசிரியர் ஜி.டபிள்யு.எம்.ரெனால்ட்ஸ் எழுதிய உமறு பாட்சா யுத்த சரித்திர நாவலை தமிழில் மொழிபெயர்த்தார்.
முதல் முதலில் தனிக் கவிதைகள் கீர்த்தனைகள் இயற்றினார். பிறகு பினாங்கு சென்று ‘வித்யா விசாரினி’ என்ற பெயரில் தமிழ் வார இதழ் ஒன்றினை 1888இல் நடத்தினார். நன்னூல் விளக்கம் எழுதினார்.
‘பொருத்த விளக்கம்’ நூலிற்கு சுதேசமித்திரன் நாளிதழில் வெளிவந்த மதிப்புரையை ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் பார்த்து பெருமகிழ்வுற்று கி.பி.1901 ஆம் ஆண்டு பாஸ்கர சேதுபதியுடன் நாகூர் சென்று, குலாம் காதிர் நாவலரை சந்தித்து உரையாடினார். அப்பொழுது நாவலர் மதுரையில் தமிழ்ச்சங்கம் ஒன்றினை நிறுவும்படிக் கேட்டுக்கொண்டார். தமிழ்ச்சங்கத்தின் முதற்பெரும் உறுப்பினராக குலாம் காதிறு நாவலரின் பெயரைச் சேர்த்தார்.
அரபு மொழியின் கடுமையான அச்சர வாக்கியங்களுக்கு நேரான தமிழ் மொழியினை அறிந்து அரபுத் தமிழ் அகராதி ஒன்றினை நாவலர் சிறந்த முறையில் வெளியிட்டார்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி தமிழக அரசு குலாம் காதிறு நாவலரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது.

Friday 21 February 2014

இறைநம்பிக்கை - இறை நெறியோடு வாழ்வோம்...


 இறைநம்பிக்கை - இறை நெறியோடு வாழ்வோம்...


(இறைநம்பிக்கை), "இஸ்லாமும்' (இறை நெறியில் மனிதர்கள் வாழ இறைவன் நமக்கு அளித்த மார்க்கம்) ஒன்று என்ற பொருள்பட, திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. "இறைவன் ஒருவன்' என்று உள்ளத்தால் தீர்மானம் செய்வதற்கு "ஈமான்' என்றும், அதனை செயல் முறைப் படுத்துவதற்கு "இஸ்லாம்' என்றும் சொல்லப்படுகிறது.
இறைவன் யாரை வாழ நாடுகிறானோ, அவரை வாழ வைப்பான். யாரை மரணிக்க நாடுகிறானோ, அவரை மரணிக்கச் செய்வான். மேலும், உண்ட உணவை செரிக்கச் செய்து சத்துக்களையும், கழிவுகளையும் பிரிப்பதும் அவனேயாவான்.
பேசுவது, கேட்பது, பார்ப்பது, நடப்பது, அமர்வது, உறங்குவது, விழித்தெழுவது போன்ற நமது அனைத்து செயல்களுக்கும், இறைவன் மீது நாம் முழு நம்பிக்கை வைத்தால், இறைவன் நமக்கு உறுதுனையாக இருப்பான்.
மனிதன் பணத்தை சம்பாதிக்க பைத்தியமாகவும், வெறித்தனமாகவும் செயல்படுகிறான். அந்த எண்ணத்தை பல நேரங்களில் இறைவன் பொய்யாக்கி விடுகிறான். அவனது தொழிலில் இலாபம் கிடைக்கும் என பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பான். ஆனால், இறைவன் அவனுக்கு நஷ்டத்தை உண்டாக்கி விடுவான். அம்மனிதன் எதிர்பாராத அளவில் இலாபம் கிடைக்கும்படி செய்துவிடுவான். இறைவன்தான் நாடியதை மட்டுமே செய்வான். மனிதன் நாடுவதை செய்வதில்லை.
இறைவன் யார் யாரை எப்படி எப்படியெல்லாம் நடத்துகிறான் என்பதை தனது திருமறை அத்-3 - வசனம் 26இல் கூறுவதைக் காண்போம்:
( நபியே!) நீர் கூறுவீராக!: " அல்லாஹ்வே! ஆட்சிக்கு அதிபதியே! நீ நாடுகிறவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய், மேலும், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறிக்கிறாய். இன்னும், நீ நாடியவரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்துகிறாய்; நன்மை (தீமை) அனைத்தும் உன்வசமே உள்ளன. நிச்சயமாக! நீ அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவன்.''
இறைவன், நபிதாவூது (அலை) நபி சுலைமான் (அலை) - நபி துல்கர்னைன்(அலை) ஆகியோருக்கு இவ்வுலக ஆட்சியை வழங்கினான். அம்மூன்று இறைத்தூதர்களும், மக்களின் நேசனாக விளங்கி நல்லாட்சி புரிந்து வந்த காரணத்தால், அவர்களுக்கு இறையருளையும், இறைப் பண்பையும் வழங்கினான் இறைவன்.
மாறாக, நம்ரூத் - ஃபிர்அவ்ன் - காரூன் போன்ற கொடுங்கோல் மன்னர்கள், ஆட்சி அதிகாரத்தில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். அது சமயம், அவர்கள் உலக இச்சையில் மோகங் கொண்டு, தீச் செயல்களில் ஈடுபட்டு மக்களுக்கு இன்னல்கள் பல விளைவித்த காரணத்தால், இறைவன் கோப சாபத்தால் அனைத்தையும் இழந்து, அல்லலுற்று அழிந்தே போனார்கள் என்பது இஸ்லாமிய வரலாறு.
இறைவனை நாம் ஐங்காலம் தொழும் போது இறையைச் சத்துடனும், இறை நம்பிக்கையுடனும் தொழ வேண்டும். மலைகள் பூமியின் மீது எப்படி வலுவாக, அசைக்கமுடியாத அளவுக்கு அமைந்துள்ளதைக் காட்டிலும், ஒரு முஸ்லிம் இறைவனிடம் " நம்பிக்கை'யையும், "இறைநெறி'யையும் அதிகமதிகம் கொண்டிருக்க வேண்டும்.
எனவே, நாம் அனைவரும் இறை நம்பிக்கை, இறைநெறியோடு வாழ்ந்து இறைப் பண்பைப் பெறுவோம்!.

Thanks to |Dinamani Vellimani 21-02-2014

Friday 7 February 2014

அழகிய குணங்கள்...



By ஜி. அஹ்மது

First Published : 06 February 2014 04:33 PM IST
புறம் பேசுவது, கோள் சொல்வது இரண்டுமே ஒரு தாய் வயிற்றில் பிறந்த சிசுக்கள் போன்றவை. இது போன்ற குணங்கள் கீழ்த்தரமானவை.
"'உங்களில் ஒருவர் மற்றொருவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரியின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே... (புறம்பேசுவதும் அவ்வாறே). அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுவோரை அங்கீகரிப்போனாகவும் கிருபை செய்வோனாகவும் இருக்கிறான்(அல்குர் ஆன் 49:12)''.
புறம்பேசுவது - கோள் சொல்வது இரட்டை நாவுடைய இழி மக்களின் பண்பு. இரட்டை நாவுடையவர்கள் தனது சகோதரனைப் பற்றியும்,தனது நண்பர்களைப் பற்றியும் புறம் - கோள் இரண்டினையும் கூறுவர். ஆனால் நேரில் சந்திக்கும்போது முக மலர்ச்சியுடனும், நேசத்துடனும் அன்பைப் பொழிந்து உரையாடுவர். ஆனால், உண்மை முஸ்லிம்கள் இரண்டு செயல்களிலிருந்தும், இரட்டை வேடத்திலிருந்தும் விலகியே இருப்பர்.
ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி மற்றவரிடம் இழிவாகப் பேசி அவர் இப்படிச் சொன்னார், அப்படிச் சொன்னார் என குற்றம் குறை சொல்வது "புறம்' பேசுவது போன்றது.
"தனக்கு தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகியிருப்பது ஒருவரின் அழகிய இஸ்லாமிய நற்பண்பில் ஒன்று'' என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள்.
அல்லாஹ் உங்களிடம் வெறுக்கும் குணங்கள் மூன்று.
"1. அவர் சொன்னார் (இவ்வாறு) சொல்லப்பட்டது என்பது போன்ற வதந்திகளில் ஈடுபடுவது.
2. அனாவசியமாகக் கேள்வி கேட்பது.
3. செல்வத்தை வீணடிப்பது'' (நூல்: முஸ்லிம்)
கோள் சொல்லும் குழப்பவாதிகளுக்கு உலகில் இழிவும், மறுமையில் கொடிய முடிவும் ஏற்படும். அவன் தனது தவறை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் வெற்றி காண அனைத்து வாயில்களும் மூடப்படும்.
"கோள் சொல்லித் திரிபவன் சுவனம் புக மாட்டான்'' (நூல்: புகாரி, முஸ்லிம்).
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ஒருநாள் இரண்டு கபர்களுக்கிடையே கடந்து சென்றபோது, அவர்கள் கண்ட காட்சியினை கீழ்காணும் ஹதீஸ் நமக்குத்
தெளிவுபடுத்துகிறது.
"அறிந்துகொள்ளுங்கள். இந்த இருவரும் கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள். இவர்கள் வேதனை செய்யப்படுவது வெளித்தோற்றத்தில் கடுமையாகத் தெரியும் ஒன்றுக்காக அல்ல. அறிந்துகொள்ளுங்கள்! அந்த இருவரில் ஒருவர், "கோள்' சொல்லித் திரிந்து கொண்டிருந்தார். மற்றொருவர், சிறுநீர் கழித்தபின் தூய்மைப்படுத்திக்கொள்ளவில்லை'' (நூல்: புகாரி, முஸ்லிம்).எனவே, "கோள் - புறம்" ஆகிய இழிகுணங்களிலிருந்து விலகி, நபி(ஸல்) அவர்கள் மொழிந்துள்ள அழகிய இஸ்லாமிய குணங்களை ஏற்போம்.

Thanks \dinamani vellimani 06-02-2014

Friday 17 January 2014

நற்செயல்கள் புரிவோம்...


எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே; அவனைத் தவிர வணங்க தகுதி படைத்தவன் வேறு யாருமில்லை' என மனத்தால்- நாவால்- செயலால் உறுதிப்படுத்துவதே (ஈமான்) "இறை நம்பிக்கை'யாகும். ஈமான் கொண்டவர்கள் (முஃமிஃமின்கள்) இறை நம்பிக்கையாளர்கள் என்று அழைக்கப்படுவர்.
"ஈமானும் - இஸ்லாமும்' ஒன்று என்னும் பொருள்பட திருக்குர் ஆனில் கூறப்பட்டுள்ளது. இறைவன் ஒருவன் என உள்ளத்தால் நிர்ணயம் செய்வதற்கு "ஈமான்' என்றும், செயல் முறையால் காட்டுவதற்கு  "இஸ்லாம்' என்றும் கூறப்படுகிறது.
உலகப் பேராசையே இறை நம்பிக்கைக்கு எதிராக இன்று நம்முன் நிற்கிறது. சிற்றின்பங்களுக்காக செய்யப்படும் பாவங்களினால், ஈமான் கரையப்பட்டு மறுமையின் பேரின்பத்தை இழக்கச் செய்கிறது.
நபித் தோழர்கள் தங்களது உயிர் பிரியும் நேரத்தில் கூட, தங்களது (ஈமான்) இறை நம்பிக்கை, (இபாதத்து) வணக்க வழிபாடு பற்றித்தான் கவலை கொண்டனர். மாறாக, தாங்கள் இறை மறுப்பாளர்களால்  கொல்லப்படுவது குறித்தோ, அதனால் ஏற்படும் வேதனை குறித்தோ கவலைப்பட்டதே இல்லை.
1. நாம் உண்ணும் உணவு நேர்மையான வழியில் ஈட்டியதாக இருக்க வேண்டும். 2. பிறர் பற்றி புறம் பேசுவதும், கேட்பதும் குற்றம் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். எனவே பிறர் பற்றி புறம்  பேசாது இருக்க வேண்டும். 3. ஓர் அடியானின் இதயத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேராது. எனவே, மற்றவரைப் பார்த்து பொறாமைப்பட வேண்டாம். 4. உலக இன்பத்தினை மனதால்  விரும்பினால் ஷைத்தான் கேலி செய்வான். எனவே, உலக இன்பங்களை மனத்தால் கூட விரும்ப வேண்டாம்.
மேற்கண்ட நான்கு வித நற்செயல்களை கடைப்பிடித்து, மனத்தூய்மையுடன் செயலாற்றினால், இறைவன் நமக்கு நற்பேற்றினை அருள்வான்.
ஒரு நன்மையான செயலை நல்ல நோக்கத்துடன் செய்தால், அது எவ்வளவு சிறியதாய் இருப்பினும், அதை மலையளவு பெரிய செயலாக இறைவன் ஏற்பான். நல்ல எண்ணமும், நல்ல நோக்கமும்  இல்லாத செயல் எவ்வளவு பெரியதாய் இருப்பினும்,அதை இறைவன் ஏற்க மாட்டான்.
இறைநேசர் நிஜாமுதீன் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் இப்படிக் கேட்டார். ""உலக நோக்கங்கள் அற்ற தூய்மையான எண்ணத்துடனும், உலக நோக்கங்களோடும் நிறைவேற்றப்பட்ட செயல்களினால்  மறுமையில் ஏற்படும் முடிவு ஏதுவாக இருக்கும்?''
கோதுமை மாவும், தண்ணீரும் கொண்டுவரச் செய்து, இரண்டையும் ஒரே பாத்திரத்தில் போட்டு பிசையும்படி கூறினார். அதன்பின், தண்ணீரையும், மாவையும் தனித்தனியாகப் பிரித்து எடுக்கும்படி  கூறினார் இறைநேசர்.
உடனே, அம்மனிதர், ""நீங்கள் கூறுவது எப்படி முடியும்? பிசைந்த மாவிலிருந்து தண்ணீரைத் தனியாகப் பிரிக்க முடியாதே'' என்றார்.
"இதே போல்தான், எந்த எண்ணத்துடன் ஒரு செயல் உலகில் நிறைவேற்றப்படுகிறதோ, அந்த எண்ணம் அச்செயலுடன் கலந்து விடுகிறது. மறுமையில் அதற்கான கூலி நிச்சயம் உண்டு. மாவிலிருந்து  தண்ணீரைப் பிரிக்க முடியாதது போல், நற்செயலில் கலந்துவிட்ட, தீய எண்ணத்தை மறுமையில் பிரிக்க முடியாது'' என்று விளக்கிக் கூறினார் இறை நேசர் நிஜாமுதீன் (ரஹ்)
"உங்களுடைய இறை நம்பிக்கையை தூய்மையாக வைத்துக்கொள்ளும். ஒரு தூய்மையான செயல் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றும்"" நபிகள் நாயகம் (ஸல்).
பாவம் செய்த ஒரு மனிதன் அல்லாஹ்வின் அச்சத்தால் அழுது - தொழுது இறைவனிடம் மன்னிப்பு கேட்டால், இறைவன் நிச்சயம் மன்னிப்பான். அந்த மன்னிப்பால், பாவம் செய்த அம்மனிதன் நரகம்  செல்வதும் முடியாத செயலாகிவிடும்.
எனவே, இறை கட்டளைப்படியும், நபிகளாரின் சொல், செயல்படியும் நற்செயல்களைப் புரிந்து சுவனம் புகுவோம்.


First Published : 16 January 2014 02:26 PM IST

Saturday 11 January 2014

இறைவனின் அருட்கொடை...

இறைவனின் அருட்கொடை

First Published : 09 January 2014 03:06 PM IST
இறைவன் முதன் முதலில் இவ்வுலகைப் படைத்தான். அதன்பின் மனிதனையும், அனைத்து உயிரினங்களையும் படைத்தான். அவர்கள் உயிர் வாழ மரம், செடி, கொடி, ஆறு, குளம், குட்டை, கடல், மலை,  சூரியன், சந்திரன் என அனைத்தையும் உண்டாக்கினான்.
மண்ணுக்கும் மனிதர்களுக்கும் ஊற்றுக்கண் தண்ணீர்தான் என்பதை உலகே அறியும். "நீரின்றி அமையாது உலகு' என திருவள்ளுவர் கூறியுள்ளார். மேலும், நாம் உண்ணும் சோறு (நெல்) தரும்  விவசாயத்திற்கு உயிர் நாடி தண்ணீர்தான்.
இறைவன் தனது திருமறை அத்.7, வசனம் 57இல் மழையை பூமியில் எப்படி பொழியச் செய்தான் என்பதைக் காண்போம்.
"தனது அருள் மழைக்கு முன் நற்செய்தி சொல்லக்கூடியதாக (குளிர்ந்த) காற்றை அனுப்பி வைக்கிறான். அது கனமான மேகத்தை சுமக்கும்பொழுது மழையை (வறண்ட) ஊரின் பக்கம் பொழியச்  செய்கிறோம். அதன்மூலம் எல்லா (வகை) கனி வர்க்கங்களையும் நாம் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே மரணித்தவர்களை (மண்ணறையிலிருந்து) நாம் எழுப்புவோம். நீங்கள் நல்லுபதேசம் பெறவே  (இதனைக்) கூறுகிறோம்''.
ஆனால், கோடை காலத்தில் காற்றும், வெப்பமுமாக இருப்பதால் மேகங்கள் தோன்றினாலும் மழை பொழிய வாய்ப்பில்லை. ஆகையால், கோடை காலத்தில் ஆறு, குளம், குட்டைகளில் தண்ணீர்  வற்றிவிடக் கூடிய நிலை ஏற்படலாம்.
மழை நீர் தெளிவாகவும், மென்மையாகவும் இருக்கும். புல் பூண்டுகள், மரம், செடி, கொடிகளின் பசுமைக்கும் வளர்ச்சிக்கும் மழைநீரின் பங்கு அதிகம் தேவைப்படுகிறது. சூடான இரும்பில் மழைத்துளி  விழுந்தால், இரும்பு நீரை உறிஞ்சிவிடும். அதே நீர்த்துளி தாமரை இலைமேல் விழுந்தால், முத்துபோல் மின்னும், உருளும், சூரிய ஒளியில் காய்ந்துவிடும். அதே மழைத்துளி கடலிலுள்ள முத்துச்  சிப்பியில் விழுந்தால், சிப்பி அந்த நீர்த்துளியை முத்தாக வளர்த்து நமக்குத் தருகிறது. இது இறைவன் அருளிய அருட்கொடை.
பூமியில் மணல் இருந்தால்தான் மழைநீர் சொட்டுசொட்டாக நிலத்தில் இறங்கும். இதனால் நிலத்தடி நீரை சேமிக்க முடியும். மணல் இல்லை என்றால் மழை நீர் கழிவு நீராக கடலில்தான் சென்றடையும்.
எனவே, மழை நீர் கடலுக்குச் சென்றடையாமல் காப்பதற்கும், பெருமழையினால் ஏற்படும் வெள்ள ஆபத்தினைத் தடுப்பதற்கும், மழை பொழியாது வறட்சி ஏற்பட்டு, பூமி விளையாது பஞ்சம் - பட்டினி  சாவுகளை ஒழிப்பதற்குச் சிறந்த வழி, அனைத்து நதிகளையும் ஒன்றாக இணைப்பதேயாகும். அதாவது, "தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தினால்'தான் மழை நீரை சேமித்து அனைத்து உயிர்களையும்  காத்திட முடியும்.
எனவே, மணல் கொள்ளையைத் தடுத்து மரம் வளர்த்து இறைவனின் அருள் மழையைப்பெறுவோம்.